news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 19 February 2016

தமிழக முதல்வர் ஊதிய முரண்பாடு மற்றும் CPS திட்டம் பற்றி அறிவிப்பு ஏமாற்றம்.

JACTTO அமைப்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைத்து போராட்டம் ஒத்திவைத்திருந்தது 110 விதியின் கீழ் அறிவிப்பு வரும் என்று நம்பிக்கை ஊட்டினர்.

CPS திட்டம் பற்றி அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும். என்ற அறிக்கை
யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது எந்தபயனும் இல்லை

JACTTO உயர்மட்டக் கூட்டம் நாளை மறுநாள் (21.2.16) கூடி இதுபற்றி முடிவெடுக்க உள்ளது

நாளை மனித சங்கிலி போராட்டம் மதுரை இரயில் நிலையத்தில் நாளை (20.2.16) காலை 11 மணிமுதல் 12 வரை நடக்க இருக்கிறது.

நம் உணர்வுகளை புதுப்பிக்கவும் நமது ஏமாற்றத்தை எண்ணிக்கையில் காட்டவும் வடிவமைக்கப்பட்ட போராட்டம்.

CPS திட்டம் கைவிடும் வரை இந்தஅரசு மட்டுமல்ல எந்த அரசையும் தமிழ்நாட்டில் ஆளவிடப்போவது இல்லை.

ஆசிரியருக்கான கோரிக்கைகளைஒன்றிணைந்த ஆசிரியர் கூட்டமைப்பால் தான் அதைநோக்கி செல்லமுடியும்.


நம்பிக்கை வையுங்கள் கை கோருங்கள் நாளை நமதே