தமிழகம் முழுவதும் மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ், பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மார்ச் 5ம் தேதி அரசு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.முதற் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் 2 பிரிவுகளாக செய்முறைதேர்வு 2 வாரம் நடக்கிறது. அதாவது சில பள்ளிகளுக்கு இன்று (பிப்.8) முதல் பிப்.20ம் தேதி வரை நடக்கிறது. செய்முறை தேர்வில் மாணவ, மாணவிகளின் செயல்முறை பதிவேடு நோட்டு புத்தகம் அடிப்படையிலும், ஆய்வகத்தில் நேரடி செய்முறை பயிற்சியின் அடிப்படையிலும் மார்க் வழங்கப்படும். ஆய்வகங்களுக்கு, வெவ்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வித புகரும் எழாதபடி கவனமுடன் பணியாற்றுமாறு முதுகலை ஆசிரியர்களை நமது அமைப்பு கேட்டுக்கொள்கிறது