news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 22 February 2016

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு

ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட, 28 ஆசிரியர்சங்கங்களை ஒன்றிணைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ) உருவாக்கப்பட்டது. ஜாக்டோ சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.
இந்த நிலையில், ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.  ஜாக்டோ தனது கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வந்தது. ஆனால் இந்த அரசு செவி மடுக்கவில்லை. 6 கட்ட தீவிர போராட்டத்துக்கு பிறகும் முதல்வர் ஜெயலலிதாவும், நிதியமைச்சர் பன்னீர் செல்வமும் கண்டு கொள்ளாத செயல் எங்களை அவமதித்து, அவமானப்படுத்தும் செயல். இந்த அரசின் மதிக்காத செயலை கடுமையான வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். மார்ச் மாதம் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள், சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், போராட்டத்தை 3 மாத காலத்துக்கு ஒத்தி வைக்கிறோம்  என ஜாக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும்