news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 1 February 2016

ஜாக்டோ மறியல் போராட்டம் இரண்டாம் மற்றும் முன்றாம் நாள் போராட்டம்






மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் உள்ள குறைகளை களைய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் 3 நாட்கள் தொடர்மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 30–ந்தேதி முதல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை சார்பில் போராட்டம் நடைபெற்றது. முதல் நாள் போராட்டத்தில் சுமார் 800–க்கும் மேற்பட்டோரும், 2–வது நாளான நேற்று 540–பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் 3–வது நாளான இன்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆசிரிய–ஆசிரியைகள் நமது அமைப்பின் மாநில பொதுச்செயலாளர்இரா.பிரபாகரன் ,மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட சுமார் 2,200 பேரை போலீசார் கைது செய்தனர்