மாலை 5.50க்கு
அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை ஜேக்டோ உயர்மட்டக்குழு
உறுப்பினர்கள் 22 பேர் கலந்துக் கொண்டனர்.அதில் அவர்கள் - 15 அம்ச
கோரிக்கைகள் குறித்து விளக்கமாகவும் விவரமாகவும் எடுத்துரைத்தனர்.
பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம்
அவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன் அவர்கள்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி
அவர்கள் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்,
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி.சபிதா அவர்கள்,
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி
இயக்குனர் திரு.இளங்கோவன் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்றனர்.
ஜாக்டோவின் கோரிக்கைகள் முதல்வர் பரிசீலித்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உறுதிமொழி; இதையடுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பிப்ரவரி 16 அன்று கூட ஜாக்டோ முடிவு
அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும் என ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும் என ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.