news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 26 February 2016

பிளஸ் 2 வினாத்தாளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை 286 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 683 மாணவ, மாணவிகள் 92 மையங்களில் எழுது கின்றனர். மதுரை மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. அவை 12 நோடல் மையங் களுக்கு பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. மையங்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பார்வையிட்டார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவட்டத்தில் மாணவ, மாணவி களின் எண்ணிக்கைக்கு அதிகமாகவே அனைத்துப் பாடங்களுக்கும் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாளில் ஏதாவது பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அது மாற்றப்படும். ஒவ்வொரு நோடல் மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மையத்தை திறக்க தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் என இருவரிடமும் சாவிகள் இருக்கும். இருவரும் இணைந்து திறக்கும் பட்சத்தில் தான் மையத்திற்குள் செல்ல முடியும். மதுரை டிஇஓ. அலுவலக மையத்தில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.