news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 30 June 2015

ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்து உள்ளன. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜாக்டோ உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம், தமிழக ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. ஆலோசனை முடிவில், மீண்டும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும், அரசு அழைத்துப் பேசாவிட்டால், ஆக., 1ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Monday 29 June 2015

நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம்

  நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 5க்குள் , உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடமும் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்
விருதுக்கான படிவம்


Sunday 28 June 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் ஜிபிஎப் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை ஆன்லைனில் வழங் கப்பட உள்ளது. இந்த கணக்கு அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக் கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக மாநில முதன்மை கணக்காயர் அலுவல கம் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தமிழக அரசு ஊழியர்களின் 2014-15-ம் நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை (அக்கவுண்ட் சிலிப்) மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஜிபிஎப் கணக்கு இருப்பை அறிந்துகொள்வதைப் போன்று சந்தாதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களின் 2014-15 வருடாந்திர கணக்கு அறிக் கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சந்தாதாரர்கள் தங்கள் செல்போன் எண்ணை இந்த இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். தகவல் பெற.. இந்த ஆண்டுமுதல் வரு டாந்திர கணக்கு அறிக்கை சீட்டு மாநில முதன்மை கணக்கா யர் அலுவலகத்தில் இருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. கணக்கு அறிக்கையில் கொடுக் கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந் தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன்தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருந்தால் தொலை பேசியிலோ, மின்னஞ்சலிலோ, தபால் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள் ளலாம். தொலைபேசி எண்: 044-24314477 (ஐவிஆர்எஸ் மூலம்), 24342812. மின்னஞ்சல்: aggpf@tn.nic.in முகவரி: துணை மாநில கணக்காயர் (நிதி-1), தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலு வலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Thursday 25 June 2015

முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா? RTI தகவல்




உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
      தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை, 9:00 மணிக்கு வகுப்புகள் துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிகிறது. கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில், 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, 4:00 மணிக்கு முடிகிறது. சிறப்பு வகுப்புகளை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்த, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன், ஒரு மணி நேரம்;  
           10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மாலையில் வகுப்புகள் முடிந்த பின், ஒன்றரை மணி நேரம், சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
'இந்த திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை, ஆசிரியர்கள்
முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, தலைமை ஆசிரியருடன் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர் இல்லை என்ற காரணம் காட்டி, சிறப்பு வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,PASSPORT பெற NOC தேவையில்லை-மத்திய அரசு கடிதம

Tuesday 23 June 2015

மதுரை மாவட்ட கழகம் முதன்மைக் கல்வி அலுவலருடன் சந்திப்பு


12.6.15 அன்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தனர் மாவட்டத்தில் உள்ள கோரிக்கைகளை தெரிவித்தனர்
1.மார்ச் 2015 நடைபெற்ற போது தேர்வில் நிலையான படையில் பணியாற்றிய முதுகலைஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்கப்படவில்லை
2.செய்முறைத் தேர்வுக்கான உழைப்பூதியம்  3 மாதத்திற்கு பிறகும் இன்னும் வழங்கப்படவில்லை
3.பள்ளி ஆய்வக உதவியாளர் பணிப்பதிவில் பணியாற்றிய முதுகலைஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்கப்படவில்லை
4.பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் வினாத்தாள் தயாரிப்புக்கு வழங்கப்படும் உழைப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் வரும் கல்வியாண்டில் உயர்த்தி தரவேண்டும்
5.வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தமிழ் ஆங்கிலம் உட்பட தேவைப்பட்டியல் பெற்று கூடுதல் பணியிடம் பெறவேண்டும்
6.பள்ளிகளில் விலையில்லா பொருள்களை மையங்களிருந்து பெறுவது மாதக்கணக்கில் நடைபெறுகிறது அதில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் கற்பித்தல் பணி பாதிப்படைகிறது. பொருள்களை நேரடியாக பள்ளிகளிலே கொடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்    
             என கோரிக்கை விடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆஞ்சலோ இருதயசாமி ஆவன செய்வதாக உறுதி அளித்தார். நிலுவையில் உள்ள பணபலன்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது
மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திரன்,  மாநில மகளிரணி இணைச் செயலாளர் விமலா , மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், வினோத், முருகன், சுதாகர், துரைராஜா. ஆனந்தசகாயநாதன், பாண்டியன், பிரபாகரன் ,  சம்பத் சௌந்தரபாண்டியன் பிரபு பாலகிருஷ்ணன் விஜயகுமார் சோலைராஜா கரோலின் ஆகியோர் உடனிருந்தனர்.

Saturday 20 June 2015

புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடர் தாக்குதல்கள்


ஓய்வூதிய ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய வரையறைகள் 2015 (ஓய்வூதியதிட்டத்தில்\ இருந்து வெளியேறுதல் மற்றும் திரும்பப்பெறுதல்) குறித்து 11.05.2015 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் பங்கேற்பு ஓய்வூதியதிட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள் ஓய்வூதிய திட்டத்திலிருந்து வெளியேறும் நிகழ்வின் போதும் ஊழியரின் பங்களிப்பு தொகையில் 25%தொகையினைத் திரும்பபெறுதலில் உள்ள நடைமுறைகள் குறித்தும் கீழ்கண்ட விபரங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையசட்டம் பிரிவு 52ன்படி தெரிவித்துள்ளது.

திட்டத்தில் இருந்து வெளியேறுவோர்

1. ஓய்வின் போது உள்ள மொத்த தொகையில் 40% ஓய்வூதியத்திற்கு முதலீடு செய்யப்படும்.

2. 40% ஓய்வூதியத்திற்கு முதலீடு செய்யப்பட்ட தொகையினை 70 வயது

நிறைவடையும் வரை திரும்பப் பெற இயலாது.

3. சந்தாதாரர் கணக்கிணைப் பராமரிப்பதற்காக மத்திய கணக்கு பதிவு முகமை(CRA), ஓய்வூதியநிதி அறங்காவலர்  வங்கி மற்றும் பிற அமைப்புகளுக்காக PFRDA அறிவிக்கும் கட்டணத்தினைச் செலுத்தவேண்டும்.

4. ஓய்வூதிய கணக்கில் ரூபாய் இரண்டு லட்சமோ அல்லது அதற்குக் குறைவான தொகையோ இருப்பின் முழுவதுமாக சந்தாதாரரிடம் வழங்கப்படும் . மேலும்,மாதாந்திர ஓய்வூதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது.

5. விருப்ப ஓய்வின் போது உள்ள மொத்ததொகையில் 80% ஓய்வூதியத்திற்கு

முதலீடு செய்யப்படும். மீதம் உள்ள 20% தொகை மட்டுமே வழங்கப்படும்.

முதலீட்டில் 25% திரும்பப்பெற: புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் வழங்குவதற்காக, அரசு ஊழியரான சந்தாதாரர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் இருப்பில் உள்ள 25%தொகையினை திரும்பப் பெற கீழ்கண்ட நிபந்தனைகளின் பேரில் அனுமதித்துள்ளது.

அ) நோக்கம்:

i. சந்தாதாரரின் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் உயர;கல்விபயில.

ii.சந்தாதாரரின் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின்

திருமணத்திற்காக.

iii.புதிதாக வீடுகட்ட மற்றும் வீட்டடி மனை வாங்க. (ஏற்கனவே சொந்தவீடு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.)

iv.. குறிப்பிட்ட நோய்களின் சிகிச்சையின் பொருட்டு சந்தாதாரர் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் மருத்துவ சிகிச்கைக்காக கீழ்கண்டநோய்களுக்கு

1.      Cancer
2. Kidney Failure(End Stage Renal Failure)
3. Primary Pulmonary Arterial Hypertension
4. Multiple Sclerosis
5. Major Organ Transplant
6. Coronary Artery Bypass Graft
7. Aorta Graft Surgery
8. Heart Valve Surgery
9. Stroke
10. Myocardial Infarction (First Heart Attack)
11. Coma
12. Total blindness
13. Paralysis
14. Accident of serious/ life threatening nature
15. any other critical illness of a life threatening nature as stipulated in the

Circulars, guidelines or notification issued by the Authority from time to time.

ஆ) வரையறைகள்:

தகுதியான அளவில் கீழ்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு முறையும் அனுமதிக்கப்படும்.

1. சந்தாதார்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும்.

2. சந்தாதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் கணக்கில் உள்ள தங்கள் பங்களிப்பு செய்த தொகையில் 25%ற்கு அதிகமில்லாத தொகையினை மட்டுமே திரும்ப பெறமுடியும்.

இ). அடிக்கடிநிகழும் நேர்வின்போது:

இப்பரிந்துரையானது சந்தாதாரருக்கு தொகையினைத் திரும்பப் பெற தங்கள் பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு முறை திரும்பப் பெற்றபிறகு மீண்டும் பெற குறைந்தபட்ச இடைவெளி ஐந்து ஆண்டுகள் ஆகும்.

இருப்பினும் மருத்துவச் செலவின் பொருட்டு சந்தாதொகையை திரும்பப் பெறும் நிகழ்வில் மட்டும் ஐந்து ஆண்டு கால இடைவெளி பொருந்தாது.

நம் முன்னே உள்ள கேள்விகள்:

இன்னும் எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார்கள்?

1. பணியில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்கு அவசர தேவை ஏற்படின் தன்னுடைய பங்களிப்பினைக்கூட திரும்பப் பெற இத்தனை நிபந்தனைகள் விதிப்பதன் காரணம் என்ன?

2. மொத்தபணிக்காலத்தில் 3 முறை மட்டுமே பணத்தேவை ஏற்படுமா? பிறநேர்வுகளின் போது தன்னுடைய பணம் அரசிடம் இருக்கும்போது

யாரிடம் கையேந்துவது?;

2.       நம் பணம் யார் கையில் இப்பொழுதாவது விழித்துக்கொள்வோமா?   
                                                                         -திண்டுக்கல் பி. பிரெடெரிக் எங்கெல்ஸ்