news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 21 February 2016

அரசு பள்ளிகளுக்கு மதுரை கலெக்டர் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை

மதுரை: 'அரசு பள்ளிகள் கடந்தாண்டை விட 5 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும்,' என, கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கே.வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.
கலெக்டர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசமூர்த்தி, டி.இ.ஓ.,க்கள் லோகநாதன், துரைபாண்டி, ரேணுகாதேவி, தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி பங்கேற்றனர்.
கடந்த பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் ஆய்வு செய்யப்பட்டது. 70 சதவீதத்திற்கும் குறைவாக பெற்ற பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட தேர்ச்சியை 5 சதவீதம் அதிகரிக்க ஒவ்வொரு பள்ளியும் குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிக தேர்ச்சி பெற வேண்டும். சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியர்கள் தத்தெடுத்து அதிக மதிப்பெண் பெற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன், கணித அடிப்படை அறிவை அதிகரிக்கவும், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
'வீக்' பட்டியல் : கடந்த முழு ஆண்டு தேர்வில் 60 சதவீதத்திற்குகீழ் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள், அதன் தலைமையாசிரியர் பெயர், அலைபேசி விவர பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்களிடம் கலெக்டரே கற்பித்தல் குறித்து பேசவும் வாய்ப்புள்ளது