news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 23 May 2016

பிளஸ்2 சிறப்புத் துணைத் தேர்வு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 தேர்வில் தோல்வியுற்றவர்கள்/வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 22.06.2016 அன்று தொடங்கி 04.07.2016 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2016, மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 24.05.2016 (செவ்வாய்கிழமை) முதல் 27.05.201 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் Browsing centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
‘எச்’ வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக்கொள்ளலாம்.
தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 22 May 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கடந்த 11.5.16 அன்று மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது

1) மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு செய்முறைத்தேர்வு பிப்ரவரி 2015க்கான உழைப்பூதியம் இன்னும் 41 பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை கடந்த ஆண்டு பலமுறை நினைவூட்டியும் இன்னும் வழங்கப்படவில்லை என்பது தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
2). மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு செய்முறைத்தேர்வு பிப்ரவரி 2016 க்கான உழைப்பூதியம் முன்பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது நிலுவைத்தொகை பல மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3). மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் பல ஆண்டுகளாக கருத்தியல் தேர்வுக்கு ரூ.2ம், செய்முறைத்தேர்வுக்கு ரூ.1ம் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தித்தர வேண்டப்படுகிறது
 மேலும் பல மாவட்டங்களில் தமிழ் ஆங்கில மொழிப்பாடத்திற்கும் பேசுதல், கேட்டல், படித்தல் திறனுக்கு உழைப்பூதியம் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
4).நிலுவையில் உள்ள தகுதிகாண்பருவம் சம்மந்தமாக உள்ள பணிப்பதிவேடுகளை விரைந்து முடித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்

'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:


பிளஸ் 1 வகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; எஸ்.சி., பிரிவினருக்கு, 18; எஸ்.டி., பிரிவினருக்கு, 1; இதர பிரிவினருக்கு, 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.


இந்த விதிகளை மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும்போதே, தனியாக பதிவேடு வைத்து, இன வாரியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன், தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆக., 31க்குள் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை குறித்த விவரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday 18 May 2016

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது.



மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் மூன்று இடங்களை மாணவிகளே கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

மாவட்டத்தில் 286 பள்ளிகளை சேர்ந்த 37,437 பேர் தேர்வு எழுதியதில், 34,887 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 93.19 சதவீதம். இதில், மாணவிகள் தேர்ச்சி 95.82 சதவீதம். மாணவர்கள் தேர்ச்சி 90.36 சதவீதம். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை (92.87) விட 0.32 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஆறு அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதன் மொத்த தேர்ச்சி விகிதம் 86.81 சதவீதத்தில் இருந்து 86.58 சதவீதமாக சற்றே குறைந்துள்ளது. ஆனால், பாடங்கள் வாரியாக மாணவர்கள் பெற்ற 'சென்டம்' எண்ணிக்கை கடந்தாண்டை (597) விட இந்தாண்டு (715) அதிகரித்துள்ளது.

உற்சாகத்தில் மாணவிகள்:
 

மாவட்ட அளவில் ரேங்க் பெற்ற மாணவிகள் விவரம்:

* வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீபிரியா 1190 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 196, வணிகவியல் - 199 பொருளியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார்.

அவர் கூறுகையில், "பள்ளியில் ஆசிரியர்கள் அடிக்கடி தேர்வு எழுத வைத்தனர். வீட்டிலும் படிக்கும் சூழ்நிலையை என் அம்மா உருவாக்கி கொடுத்ததால் சாதிக்க முடிந்தது," என்றார்.

* செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீநிதி கார்த்திகா 1189 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பிடித்தார். தமிழ்- 195, ஆங்கிலம்- 194 மற்றும் பிற நான்கு பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார். இவர், "மாவட்ட ரேங்க் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் தினமும் நான்கு மணிநேரம் படித்தேன். அதனால் மாவட்ட அளவில் சாதிக்க முடிந்தது," என்றார்.

* ெசயின்ட் ஜோசப் பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவி நாகநந்தினி 1187 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 192 பிற பாடங்களில் தலா 200 மதிப்பெண் பெற்றார். இவர் கூறுகையில், "ஆசிரியர்கள் தினமும் நடத்தும் பாடங்களை வீட்டில் தினமும் படித்தேன். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தேன்.

அடிக்கடி பள்ளியில் தேர்வு நடத்தப்பட்டதால் ரேங்க் பெற முடிந்தது," என்றார்.சாதனை மாணவிகளை கலெக்டர் வீரராகவராவ், தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் பாராட்டினர்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அடிப்படையில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம் முதலிடம் பெற்றது.

இக்கல்வி மாவட்டத்தில், திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யமுனா 1179 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியில் பாடங்களில் 'சென்டம்' பெற்றார்.

இப்பள்ளி மாணவி ரோஹிணி, 1169 மதிப்பெண் பெற்று 2ம் இடம் பெற்றார். இவர், தமிழ்- 195, ஆங்கிலம்- 189, இயற்பியல்- 191, வேதியியல்- 200, விலங்கியல்- 195, கணிதம்- 199 மதிப்பெண் பெற்றார்.

டி.கல்லுப்பட்டி எம்.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி மாணவி ரேணுஸ்ரீ 1161 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இவர் தமிழ் - 194, ஆங்கிலம்- 191, இயற்பியல் - 186, வேதியியல் - 197, விலங்கியல் - 195, கணிதம் - 198 மதிப்பெண் பெற்றார்.

மூன்றும் ஒரே பள்ளி: மேலுார் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி மாணவர்களே பிடித்தனர்.

மாணவர் முத்துவிக்னேஷ்வரன் 1185 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். விலங்கியல், கணிதத்தில் 'சென்டம்' பெற்றார். பாலமுரளிக்குமார் 1184 மதிப்பெண் பெற்று 2ம் இடம் வென்றார். இவர் வேதியியல், விலங்கியல் பாடங்களில் 'சென்டம்' பெற்றார். கிருத்திகா பார்வதி 1181 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இவர், வேதியியல் மற்றும் கணிதத்தில் 'சென்டம்' பெற்றார்.

முதலிடம்: மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 94.67 சதவீதம் பெற்று உசிலம்பட்டி முதலிடமும், 94.08 சதவீதம் பெற்று மதுரை 2ம் இடமும், 90.78 சதவீதம் பெற்று மேலுார் மூன்றாம் இடமும் பெற்றன.

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள் உட்பட 81 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.

ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளி.எஸ்.புளியங்குளம், மங்களம்பட்டி, பி.அம்மாபட்டி, செங்கப்படை, மேலக்கோட்டை அரசு பள்ளிகள், பாப்பாபட்டி, கப்பலுார் அரசு கள்ளர் பள்ளிகள், மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதியார் பள்ளி.பழங்காநத்தம்

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த விவரம்:

முதலிடம்- செல்வகணபதி 1151 மதிப்பெண், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

இரண்டாமிடம்- பிரீத்தி.  1146. திருமங்கலம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. 

3ம் இடம்- சங்கீதா 1143  எம்.புளியங்குளம்அரசுமேல்நிலைப்பள்ளி 

பிளஸ் 2 தேர்வு: மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் 91 சதவீதம் தேர்ச்சி

 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த 587 மாணவர்கள், 1900 மாணவியர் என 2487 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

இதில் 499 மாணவர்கள், மாணவிகள் 1782 என  2281 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.72 சதவீதமாகும்.

 15 மாநகராட்சிப் பள்ளிகளில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சிப் பெற்று முதலிடத்தை பெற்றது. வெள்ளி வீதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.84 சதவீதத் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 97.79 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 9 பள்ளிகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளன. 4 பள்ளிகள் 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சிப் பெற்றுள்ளன.

 15 மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 2487 பேரில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 139 மாணவ, மாணவியர் ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 38 பேர், ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1 மாணவர் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


இதில் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.அனிதா 1156 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சிப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தமிழ் 192, ஆங்கிலம் 188, இயற்பியல் 192, வேதியியல் 198, உயிரியல் 192, கணிதம் 194 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 ஈ.வே.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நிலோபர் 1141 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். தமிழ் 191, ஆங்கிலம் 163, கணினி அறிவியல் 192, பொருளியல் 200, வணிகவியல் 197, கணக்குப்பதிவியல் 198 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 பொன்முடியார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.இந்து 1140 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். தமிழ் 183, ஆங்கிலம் 166, வணிகவியல் 191, கருத்தியல் 200, இருமுறை செய்முறைத் தேர்வுகளிலும் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

ஆதிதிராவிட பள்ளிகளில் இளமனூர் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி சாஸ்தினி 1102மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்

நாச்சிகுளம் ஆதிதிராவிட பள்ளியை சேர்ந்த மாணவி ஏ.ரேணுகா 950 மதிப்பெண்கள், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர்.பாலாவிஜய் 950 மதிப்பெண்களுடன் இருவரும்
இரண்டாமிடத்தையும் பெற்றனர். மாணவர் பி.அன்பரசன் 913 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

 கள்ளர் பள்ளிகள்: அரசு கள்ளர் பள்ளிகளில், பாப்பாபட்டி  அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபர்ணா 1099 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், வே.கள்ளப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி 1072 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும். கப்பலூர்  அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் மணிகண்டன்  1068 மதிப்பெண்களுடன்  மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

248 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில், 97.89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும், கடந்த ஆண்டை ஒப்புடுகையில், இந்த ஆண்டு தனியார், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே நேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.

248
அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி: பிளஸ் 2
தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு, 85.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 248 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளன. கடந்த ஆண்டு, 196 பள்ளிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறையின் முயற்சியால், கூடுதலாக, 52 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.

வளர்ச்சி பாதையில்...:கடந்த, 2012ல், 41 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்த ஆண்டு, 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன
ஜொலிக்கும் நட்சத்திரம் சரண்யா...

இப்போது எல்லோர் வாயிலும் புகுந்து வெளிவரும் ஊரின் பெயர் ஏகானம்பேட்டை.

இப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகானம்பேட்டைக்கு தன் படிப்பால் பெருமை தேடித்தந்திருக்கிறார் மாணவி சரண்யா.
காஞ்சிபுரத்தில் இருந்து எட்டாவது கிலோமீட்டரில் உள்ள ஏகானம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் படித்த சரண்யா நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் 1179/1200 மார்க்குகள் எடுத்து அரசுப் பள்ளி மாணவிகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.