புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் செப். 7-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஜூலை 18-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 5-இல் சென்னையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 22-இல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக ஜாக்டோ ஜியோ உயர்நிலைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தியும் எங்களிடம் தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதைத் தொடர்ந்து எங்களது உரிமையை நிலைநாட்டும்வகையில் திட்டமிட்டபடி வரும் செப். 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
செப். 8-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்குப் பிறகும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் செப்.10-ஆம் தேதி போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். நமது அமைப்பின் சார்பில் மாநிலத்தலைவர் மணிவாசகன் கலந்துகொண்டார் .
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஜூலை 18-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 5-இல் சென்னையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 22-இல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக ஜாக்டோ ஜியோ உயர்நிலைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தியும் எங்களிடம் தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதைத் தொடர்ந்து எங்களது உரிமையை நிலைநாட்டும்வகையில் திட்டமிட்டபடி வரும் செப். 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
செப். 8-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்குப் பிறகும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் செப்.10-ஆம் தேதி போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். நமது அமைப்பின் சார்பில் மாநிலத்தலைவர் மணிவாசகன் கலந்துகொண்டார் .