news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 27 December 2017

முதன்மைக்கல்வி அலுவலர் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Sunday 17 December 2017






பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட் டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருளி ராஜ் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் சரவணமுருகன், செல்லப்பாண்டியன் , முருகன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில முன்னாள் பொது செயலாளர் தேவேந்திரன்,மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்  பேசினர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.