அன்பிற்கினிய தோழர்களே தோழிகளே வணக்கம். 3 வாரங்களுக்கு முன்பு நெல்லை,நாமக்கல் மற்றும் காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னோடு ப.க.துறை வந்தார்கள். நெல்லை மாவட்டத்திற்கு வள்ளியூர் விடைத்தாள் நடுவப் பிரச்சனை. முடித்துத் தந்தேன். நாமக்கல் மாவட்டத்திற்கு திருச்செங்கோடு விடைத்தாள் நடுவம். கூடுதலாக 630 முதுகலைத் தமிழாசிரிர்களின் பணிவரன்முறைப் பிரச்சனை. அதனை இணை இயக்குநர் திரு.மு. பழநிச்சாமி அவர்களோடு பேசி நமது அமைப்பின் முகப்புக் கடிதத்தில் ( letter Pad ) எழுதித் தந்தோம்.JD அவர்களும் உடனடியாக W3 பிரிவின் கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரை அழைத்து பணிவரன்முறை ஆணையை போடச் சொன்னார்.கடந்த வாரம் சென்றேன். JD இல்லை. நேற்று கைபேசியில் அவரிடம் பேசினேன். உடனடியாக நேற்றே அதனை முடித்துள்ளார். JD அவர்களுக்கு இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
-வே.மணிவாசகன் மாநிலத்தலைவர்