news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 1 April 2016

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு: முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,5-ல் தொடக்கம்

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தொடங்கியது. முக்கியப் படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இன்று, இயற்பியல், பொருளாதாரம் பாடத்துடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைக்கின்றது. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 5-ம் முதல் ஏப்ரல்17 -ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் சற்று கடுமையாக இருந்ததாக மாணவர்களிடையே பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.