news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 15 March 2016

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது

மதுரை மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, திருநகர் சீதாலட்சுமி மேல்நிலைப்பள்ளி, கருமாத்தூர் கிளாரட் பள்ளி, ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளி ஆகிய 3 மையங்களில் நேற்று காலை(14.3.16) தொடங்கியது. முதல் நாளான நேற்று முதன்மை தேர்வர்கள் திருத்தும் பணியை துவங்கினர். இவர்கள் இன்றும் இப்பணியை மேற்கொள்வர். நாளை முதல் உதவி தேர்வர்கள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். முதற் கட்டமாக தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தப்படும். அதனையடுத்து, பிற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கும். விடைத்தாள் திருத்தும் பணியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கவனித்து வருகிறார்.