news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 11 October 2015

தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்தவர்கள் எவ்வளவு

தொடக்கக் கல்வித் துறையில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 742 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 79,681 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும்   பள்ளிக் கல்வித் துறையில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 473 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 23,065 பேர் மட்டுமே பள்ளிகளுக்கு வரவில்லை மொத்தமாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 215 ஆகும். இதில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,02,746 ஆகும். பள்ளிகளுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 469 ஆசிரியர்கள் வருகை புரிந்தனர் என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.


மதுரை மாவட்டத்தில் 1,800 பள் ளிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 2,655 பேரும், பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த 493 பேரும் என மொத்தம் 3,148 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.