+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் மதுரையில் நிறைவடைந்தது எப்போதும் இல்லாதவகையில் இந்த ஆண்டு முதுகலை ஆசிரியர்கள் கடும் வெயிலிலும் மகிழ்ச்சியுடன் விடைத்தாள் திருத்தி சென்றனர் காரணம் மதுரையில் தேர்வு செய்யப்பட்ட 3 மையங்கள் தான் அதற்கு முதன்மைக்கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அமைப்பு சுட்டிக்காட்டிய குறைபாடுகளை சரிசெய்ததோடு குடிதண்ணீர் கழிவறை உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் திருத்தும் பணி சிறப்பாக நடைபெற உதவிய மேலூர் மற்றும் உசிலை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் , கூடுதல் முகாம் அலுவலர்களுக்கும், அலுவலக நண்பர்களுக்கும் எமது தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பு சார்பில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம் .