news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 20 April 2016

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிகிறது

தமிழகத்தில் விடைத்தாள்கள் திருத்த 74 திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் 14ம் தேதியே மொழிப்பாடத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இயற்பியல், கணிதம் உள்ளிட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஏப்ரல் 20ம் தேதிக்குள் அனைத்து விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால், இன்னும் அந்த பணி முடியவில்லை. இந்நிலையில் நாளையுடன் திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தர விட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதியுள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் திருத்தும் பணியை முடிக்க முடியவில்லை என்று முதுநிலைப் பட் டதாரி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகளிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பதிவு எண்களை பதிவு செய்து அதன் பிறகு டேட்டா சென்டருக்கு அனுப்ப வேண்டும். அங்கு தேர்வு முடிவுக்கான பட்டியல், தயாரிக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிய 20 நாட்கள் தேவைப்படும். இதுனால் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி அல்லது அதற்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.