சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-ல்
வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல்
1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த
6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட் சத்து 91 ஆயிரத்து 806 மாண வர்களும், 4
லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுகள்
நடந்த போதே முடிவுற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச்
14-ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கள் கூறியதாவது:
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 14-ம் தேதி முதல் விடைத்தாள்கள்
திருத்தும் பணி தொடங்கிவிட்டது. தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம்
விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.
வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 5-ம் தேதி
முதல் தொடங்க உள்ளன. இதற்காக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு
விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக நடந்த தேர்வுகளான
இயற்பியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி
6-ம் தேதி முதல் தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம்
தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு மே
16-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட
கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பொறியியல் படிப்புகளுக்கு இம்முறை ‘ஆன்-லைனில்’ மட்டுமே
விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 15 தினங்களில் விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மே 9-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.