news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 10 January 2016

JACTTOசார்பில் வரும் ஜன 30,31 பிப் 1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.

2011 சட்டசபைத் தேர்தலின்போது இப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்  புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்தார்   அறிவித்து 5 ஆண்டுகளாக பலவித போராட்டம் நடத்திவிட்டோம் அதைப்பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் * அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தியாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும். * அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் அவ்வப் போது நிறைவு செய்யப்படும்.* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும். என கூறப்பட்டுள்ளது
ஆனால் பேச்சு வார்த்தை மூலம்  தீர்க்கப்படும் என கூறிவிட்டு ஒருமுறைக்கூட அழைக்கவில்லை.
தேர்தல் வரும் போதுதான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள்.அவர்கள் வெற்றிக்கு நாம் தேவைப்பட்டோம் அறிவித்தார்கள். வெற்றி பெற்றபின் மறந்தார்கள். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை.புரிந்துகொள்ளுங்கள். நமது நிலைப்பாட்டை  தெரிவிக்கவே இந்த JACTTO மறியல்.

JACTTOசார்பில் வரும் ஜன 30,31 பிப் 1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். அனைவருக்கும் தெரிவிப்போம்,கலந்து கொள்வோம், கலந்து கொள்ளச்செய்வோம்