மதுரை ஜாக்டோ அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் 21.10. 16 அன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அனைவரும் தொடர்மறியல் வரும் 30,31,1 தேதிகளில் பங்கேற்க செய்வது என்றும் அடுத்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று போராட்ட நிகழ்வை விளக்கி பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரும்போது அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பேச உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நமது நண்பர்களிடம் இதுபற்றி பேசி தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தொடர்மறியல் பங்கேற்க செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.