news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 12 November 2016

மாநிலத்தலைவர் அறிவுரை

                        அன்பிற்கினிய தோழர்களே தோழிகளே வணக்கம். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் மட்டுமே கைபேசி பயன்பாடு பற்றி சுற்றறிக்கை அனுப்பிய மாவட்டங்கள்... வேறு எந்த மாவட்டத்திலும் இது இல்லை. கூடுதலாக நாமக்கல் மாவட்டத்தில் நாற்காலி பிரச்சனை வந்து  விட்டது...கட்செவி வந்தாலும் வந்தது நமது ஆசிரியர்கள் தினமலர் நிருபர்கள் போல் இவர்களே ஆசிரியர்களுக்கு எதிராக எதையாவது இங்கே படித்தோம்.... அங்கே கேட்டோம்.... என பதிவு செய்வதை வாடிக்கை ஆக்கிக் கொண்டார்கள். இது நல்லதல்ல... பள்ளிக்   கல்வி இயக்குநர் அவர்கள் என்ன வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.... அவைகள் எதுவும் அரசாணைகள் இல்லை. அரசாணைகளைப் பின்பற்றியே பள்ளிக் கல்வித்துறை மட்டும் அல்ல அனைத்துத் துறைகளும் இயங்குகின்றன.... அதே நேரத்தில் ஆசிரியர்களாகிய நாம் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு பள்ளியில் பணியாற்ற வேண்டும்... மாணவர்களைப் போல் நாமும் குட்டிச் சட்டை போட்டுக் கொள்வது, தாடி வைத்துக் கொள்வது, நீண்ட கிருதா வைத்துக் கொள்வது என பணியாற்றுவது 29 வருட அனுபவம் உள்ள ஆசிரியன் என்ற நிலையில் இவைகள் தவறு என கருதுகிறேன்... இவன் யார் இதனைச் சொல்வதற்கு என சில மேதாவிகள் நினைக்கக் கூடும்.... அதனைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.... அதே நேரத்தில் வகுப்பு அறையில் நாற்காலி போடக் கூடாது என ஒரு மாவட்டத்தில் அறிவிப்பு வந்த உடன் குய்யோ முறையோ என ஏன் கத்த வேண்டும்.... இவ்வாறு கைபேசி, நாற்காலி என வரும்போது இயக்கம் தான் உங்களின் சுயமரியாதையை காக்க  அதற்கான செயல்பாடுகளில் இறங்கி உங்களை பாதுகாக்கிறது. அந்த வகையில் நான் அறிவுறுத்தியதின் அடிப்படையில்  நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் பணியினை செவ்வனே செய்துள்ளார்கள்... வாழ்த்துக்கள்... இதனைப் போல் சுயமரியாதை, கோரிக்கைகள் என பாதுகாக்கும் பெற்றுத் தரும் இயக்கம் TNHSPGTA மட்டுமே.... உங்களை ஏமாற்றி உறுப்பினர் சந்தா பெறும் கோயபல்ஸ்கள் இந்தப் பணிகளை 1980 முதல் எந்தக் காலத்திலும் செய்தவர்கள் அல்ல... இதனை பகுத்தறியாமல் இரட்டை உறுப்பினராக இருக்கும் நண்பர்கள் நமது அமைப்பிலே உறுப்பினராக இருக்கக் தேவையில்லை என மாநிலத் தலைமை என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.... கூடுதலாக நான் உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்வது வகுப்பு எடுக்கும் போது கைபேசி பயன்படுத்துவது, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பாடம் நடத்துவது என்பதனை அருள்கூர்ந்து தவிர்த்து விடுங்கள்.... அனைத்தையும் தெரிந்து வைத்துள்ள ( பாடத்தினை தவிர) மாணவர்கள் முன்னால் நாம் பாடம் நடத்துகிறோம் என்பதனை மட்டும் கொஞ்சம் நெஞ்சிலே நிறுத்தி பணியாற்றுங்கள்... எவ்வாறு இருந்தாலும் இடையூறு வரும்போது உங்கள் பின்னே நாங்கள் நிற்போம்.மணிவாசகன்