பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர்
குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின்
காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரை
நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித்
துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
கே.சண்முகம் பிறப்பித்தார்.
இதுகுறித்து
அவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய
ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்து
ஆராய தமிழக அரசின் சார்பில்
நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்
குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ்.
அதிகாரி சாந்தா ஷீலா நாயர்,
நிதித் துறை கூடுதல் தலைமைச்
செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும்
நபர், சென்னை பொருளாதார பள்ளியின்
பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித்,
திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின்
முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்
உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்
குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளை
மூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்த
கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும்
22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில்,
நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர்
26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனது
இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடு
மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரை
நிபுணர் குழு செயல்படும் என்று
தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.