பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் 2 இணை இயக்குநர்கள் பதவி
உயர்வு பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்
மேனிலைக் கல்வி துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் பழனிசாமி.
பள்ளிக் கல்வித்துறை பணியாளர் தொகுப்பின் இணை இயக்குநராக பணியாற்றி வருபவர்
கருப்பசாமி. இவர்கள் இருவரும் தற்போது இயக்குநர்களாக பதவி உயர்வு
பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்ற இருவருக்கும் பணியிடங்களையும் வழங்கி
பள்ளிக் கல்வித்துைற நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மெட்ரிக்குலேஷன்
பள்ளிகள் இயக்குநராக கருப்பசாமியும், வயது வந்தோர் கல்வித்துறை இயக்குநராக
பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை பள்ளிக்
கல்வித்துறை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.