மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்
தீர்மானம்: 1. தமிழக
முதல்வருக்கு வாழ்த்து. . .
தமிழகத்தின் முதல்வராக 6-வது முறை
பதவியேற்றிருக்கும், மாண்புமிகு.
முதல்வர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தின் புதிய அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் இம்மாநிலப் பொதுக்குழு
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு.
திரு.பா.பெஞ்சமின் அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 2. பள்ளிகள் தரம்
உயர்த்துதல் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்தல். .
2-(1). கடந்த 2015-2016 ஆம் கல்வியாண்டில், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம்
உயர்த்தப்படவில்லை. 2016-2017 ஆம்
கல்வியாண்டில் (நடப்புக் கல்வியாண்டில்)
கடந்த ஆண்டுக்கும் சேர்த்து சுமார் 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக்
கொள்கிறது.
2-(2). கல்வி உரிமையியல் சட்டப்படி (RTE Act) ஆசிரியர் மாணவர்கள் விகிதம் 1 : 40 என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும்
மேல்நிலைப் பள்ளிகளிலும் முதுகலை ஆசிரியர் பணியிட எண்ணிக்கையினை அதிகரித்திட
வேண்டும் எனவும்
2-(3). 1989 முதல் 2011 வரை தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக இருந்து
மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம்
உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்
பள்ளிகளுக்கும் தமிழ் உட்பட
அனைத்து கலைப் பாடங்களுக்கும்
புதிய பணியிடங்கள் வழங்கிட வேண்டும் எனவும்
2-(4). மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் இதுநாள்
வரை 3181 முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கியமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கின்றோம். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்கின்ற அடிப்படையில் மேலும் 5000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி,
நியமித்திட வேண்டும்
எனவும் தமிழக முதல்வர் அவர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2-(5). அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள
தமிழ், ஆங்கில மொழிப் பாட
ஆசிரியர்கள் சுமார் 500-700 மாணவர்களுக்கு
ஓர் ஆசிரியர் என்ற நிலையில் மிகுந்த சிரமமான சூழலில் பாடம் போதிக்கின்றனர். அனைத்து
மாணவர்களுக்கும் பருவத் தேர்வு
கூட நடத்திட சாத்தியமில்லாத சூழ்நிலையே நிலவுகிறது. எனவே
சுகூநு ஹஉவ-ன்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக மொழி ஆசிரியர் பணியிடங்கள்
உருவாக்கிட வேண்டும் எனவும் இம் மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 3. பணிமாறுதல் கலந்தாய்வு சார்ந்தவை. . .
3-(1) பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டபின், மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல்
கலந்தாய்வுக்குப் பின்பு, மேல்நிலைப் பள்ளித்
தலைமையாசிரியர் பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்திடவும், பின்பு
முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல்
கலந்தாய்வு, ஒளிவு
மறைவற்ற முறையிலும் வெளிப்படைத்
தன்மையுடனும் நடத்திட வேண்டும் எனவும்,
3-(2) தற்போதுள்ள ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வு
முறையில் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக முன்னுரிமை எண்.10 உள்ளவரின் இடம் காலி ஏற்படும் போது, தற்போது உள்ள முறைப்படி 11ஆம் நபருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது,
ஆனால் உண்மையான
முன்னுரிமை முதல் நபருக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும். இம்மாதிரியான குறைபாடுகள்
களையப்பட்டு முறையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனவும்
3-(3). பொது மாறுதல் கலந்தாய்வில் உயிரியல் முதுகலை
ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்படும் போது, அந்த இடத்திற்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்கள் யார்
விரும்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநில பொதுக்குழு
தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 4. IIT, IIS, . மற்றும் NEET – போன்ற போட்டித் தேர்வுகளை ஒட்டிய புதிய
பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுதல். . .
4-(1). IIT, IIS, . மற்றும் NEET – போன்ற போட்டித் தேர்வுகள் கட்டாயம் என்ற நிலையில்,
தமிழக மேல்நிலைக்
கல்விக்கான பாடத்திட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் எவ்வித
மாற்றமுமின்றி மாற்றியமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனத்தின் (NCERT) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் அனைத்து
மாநிலங்களும் தமது பாடத்திட்டத்தினை முறைப்படுத்திக் கொள்கின்றன. மற்ற
மாநிலங்களில் இப்பாடத்திட்டம் அப்படியே அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பு
செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ், சமூக அறிவியல் பாடங்கள் தவிர அனைத்துப்
பாடங்களுக்கும் NCERT -ல் உள்ள படி ஆங்கில
வழியில் உள்ள பாடத்திட்டத்தினை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தமிழக
மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக்
கேட்டுக் கொள்கிறது.
4-(2). அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக
மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறவும், கல்வித் திறனை மேம்படுத்திடவும், 80ரூ க்கு மேல் அறிதல், புரிந்து கொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல், நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில்
வினாத்தாட்கள் அமைய வேண்டும் எனவும், மதிப்பீட்டு முறையும் மாற்றப்பட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக
அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
4-(3). மேல்நிலைக் கல்வியில் உள்ள +1, +2 வகுப்பிற்கு பருவமுறைத் தேர்வுகள் (Semester System)
கொண்டு வரவும், அதாவது இரண்டு வருடத்திற்கும் சேர்த்து 4 பருவங்களாகப் பிரித்து Semester முறையில் தேர்வுகள் அமைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக
அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 5. 7-வது
ஊதியக்குழு சார்ந்தவை. . .
நடுவண் அரசின், 7-வது ஊதியக்
குழுவில், முதுகலை
ஆசிரியர்களுக்கு ரூ.18,150/- என்பதை
அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்துள்ளனர். இதனையே அடிப்படையாக வைத்துக்
கொண்டு தமிழகத்தில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தினை அளித்திட
வேண்டும்
தமிழகத்தில் 01.06.2009 முதல் முதுகலை
ஆசிரியர்கள் ரூ.14,100/- என்ற குறைவான
ஊதிய விகிதத்தினையே இன்று வரை
பெற்று வருகின்றனர். இதனை
மாற்றி அமைத்து, எதிர்வரும்
ஊதியக்குழுவின் பரிந்துரையில் ரூ.18,150/- என்பதை அடிப்படையாக வைத்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டுமாய் இம்மாநிலப்
பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 6 . மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம்
வேண்டுதல். . .
மேல்நிலைக் கல்வியில் உள்ள சுமார் 3400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள நிலையில் தனி இயக்குநரகம்
அமைத்திட வேண்டும் அல்லது மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநர் பணியிடமாவது
ஏற்படுத்தி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பணி
சார்பான தேவைகளை உடனடியாக தீர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலையினை ஏற்படுத்திட வேண்டும்
எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 7. மேல்நிலைக் கல்விக்கான ஒரு நபர் குழு அறிக்கை
வெளியிட வேண்டுதல். .
மேல்நிலைக் கல்வியில் உள்ள இடர்பாடுகளை களையும் விதமாக அமைக்கப்பட்ட ஒருநபர்
குழுவான திரு. ஜெகந்நாதன் குழு, திரு.கருணாகரன்
குழு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட்டு முதுகலை
ஆசிரியர்களின் துயர் துடைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக்
கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 8. தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் நீக்கிட
வேண்டுதல். . .
மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
2011-ஆம் ஆண்டு
ஆட்சியில் அமரும் போதே
ஊஞளு திட்டம் முற்றிலும் அகற்றப்பட்டு, பழைய ஓய்வூதியத்திட்டமே பின்பற்றப்படும் என
கூறினார்கள். ஆனால் நடைமுறைக்கு
வரவில்லை. 6-வது
முறையாக பதவியேற்றிருக்கும் தமிழக
முதல்வர் அவர்கள் தன்பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தினை நீக்குவது பற்றி
ஆராய ஒரு குழுவினை
அமைத்துள்ளார்கள். காலம் தாழ்த்தாமல் விரைவில் பழைய ஓய்வூதியத்
திட்டத்தினையே நடைமுறைப்படுத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக
முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 9. 2004-2006 - தொகுப்பூதியக்
காலத்தை முறையான பணிக்காலமாக்கிட வேண்டுதல். . .
2004 முதல் 2006 முடிய உள்ள காலங்களில் தொகுப்பூதியத்தில்,
பணியில் சேர்ந்த முதுகலை
ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து
அக்காலங்களுக்குரிய நிலுவை ஊதியத்தினை வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநிலப்
பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 10. உதவித்
தலைமையாசிரியர் படி வழங்கிட வேண்டுதல். ..
மேல்நிலைப் பள்ளிகளில் உதவித்
தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்களுக்கு படியாக ரூ.1000/- ஒவ்வெரரு மாதமும் வழங்கிட வேண்டும் என
இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 11. இடஒதுக்கீடு முறையில் மாணவர்களை சேர்த்தலைக்
கண்டித்தல். .
அரசுப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற
வேண்டும் என எவ்விதமான அரசாணையும் இல்லை. ஆனால் பள்ளிக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகளில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அரசுப் பள்ளிகளில் அனைத்து
மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் நிலை உள்ளது. யாருக்கும் பள்ளியில் சேர்க்கை
இல்லை எனக் கூறும் நிலையே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில்
இச்செயல்முறையினைக் காரணம் காட்டி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
கூறுவதை இம்மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம்: 12. அனைத்து துறைப்
பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்திட வேண்டுதல். . .
ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், வனத்துறைப்
பள்ளிகள், அறநிலையத்துறைப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், இது போன்ற
அனைத்துப் பள்ளிகளும் அரசின் நேரடி நிதியிலிருந்தே நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் மேற்கண்ட பள்ளிகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகளுடன் இணைத்து பள்ளிக் கல்வித்துறை என்ற ஒரே நிர்வாகத்தின்
கீழ் கொண்டு வர வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக்
கொள்கிறது.
தீர்மானம்: 13. ஒரே நிலையில் 30 ஆண்டுகள் பணிக்காலம் - 6ரூ ஊதிய உயர்வு வேண்டுதல். .
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் 30 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கு 6ரூ, சிறப்பு நிலைக்கு 6ரூ ஊதிய உயர்வு
வழங்குவது போல் 30 ஆண்டுகள் எவ்வித
பதவி உயர்வும் இல்லாமல் பணி முடித்தவருக்கு 6ரூ ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என இம்மாநிலப்
பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 14. தேர்வுத் துறை
சார்ந்த கோரிக்கைகள். . .
14-(1). மேல்நிலைக் கல்வியில், ஒருங்கிணைந்த விடைத்தாள் திருத்தும் மையங்கள்
கல்வி மாவட்டம் தோறும் அமைத்திட
வேண்டும் எனவும்
14-(2). மேல்நிலைத் தேர்வு
விடைத்தாள் ஒன்றுக்கு உழைப்பூதியமாக
ரூ.20/- வழங்கிட
வேண்டும் எனவும்
14-(3). மாணவர்கள் எதிர்கால நலத்தினைக் கருத்தில்
கொண்டு, முதுகலை
ஆசிரியர்களுக்கு நாள்
ஒன்றுக்கு மொழிப்பாடத்திற்கு (காலை 10, மாலை 10) 20 தாள்களும், மற்ற பாடங்களுக்கு (காலை 8, மாலை 8) 16 தாள்களும் விடைத்தாள் திருத்த வழங்கிட
வேண்டும் எனவும்
14-(4). தேர்வுக் கால
பணியான, துறை
அலுவலர், கூடுதல்
துறை அலுவலர், வழித்தட அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், பறக்கும் படை உறுப்பினர், வினாத்தாள் கட்டுக் காப்பாளர் போன்ற அனைத்து
பணிகளுக்குமான உழைப்பூதியத்தினை தற்போது
இருப்பதை விட 3 மடங்கு உயர்த்தி
வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக்
கொள்கிறது.