news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 6 May 2016

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்  

www tnresults.nic.in, 

www.dge1.tn.nic.in, 

www. dge2.tn.nic.in   

என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும்ப புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 10.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.