தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது.
மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும்,
4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர்; தனித் தேர்வர்கள், 43,000
பேர். புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர்
இது முதுகலை ஆசிரியர்களின் உழைப்பையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தேர்வாகும் எனவே தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிறப்பாகவும் கவனத்துடனும் பணியாற்ற நமது அமைப்பின் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டக் கழகமும் கேட்டுக் கொள்கிறது.