news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 20 March 2015

மதுரையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை



19.3.15 அன்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்டத் தலைவர் சரவண முருகன் தலைமையில் மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து விடைத்தாள் திருத்தும் மையங்களில் குறைபாடுகளை சுட்டிக் காட்டி சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தரவேண்டும். மொழிப்பாடங்களுக்கு காலை மற்றும் மாலை நிர்ணயிக்கப்பட்ட  விடைத்தாள்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும், முதன்மைத் தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கு விடைத்தாள்கள் திருத்த கொடுக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்

மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், வினோத், ராஜேந்திரன் துரைராஜா. ஆனந்தசகாயநாதன், சம்பத், சௌந்தரபாண்டியன், பிரபு பாலகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.