news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 26 March 2015

பொதுத் தேர்வில் பணிபுரியும் ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கோரி மாநிலத்தலைவர் மணிவாசகன் அறிக்கை

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38% காக இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90% தொட்டு விட்டது. ஆனால் தேர்வுகள் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் உள்ளாடைக்குள் கையை விட்டு பார்ப்பதும் மாணவிகளின் உள்ளாடைக்குள் கையை விட்டு பார்ப்பதையும் வாடிக்கையாக செய்து வருகிறார்கள்.மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறியச் செயலாகும்.பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும் ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை தேர்வு நேரங்களில் குழந்தைகளை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதை கண்டு கொள்ளாமல் இருப்பதை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்