மதுரை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்தவர் ஆஞ்சலோ இருதயசாமி,
இவர் விழுப்புரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக,
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணிபுரிந்த மாரிமுத்து,
நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.