இன்று 20. 1. 17 துறை அலுவலர் தொடர்பான கூட்டம் மதுரையில் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர்களின் மத்தியில் நமது TNHSPGTA அமைப்பின் தேர்வு உழைப்பூதியம் தொடர்பான போராட்டங்களை விளக்கி கூறி ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது அதனால் முதன்மைக்கண்காணிப்பாளர் கூட்டம் மட்டும் நடைபெற்றது. ஆணைகள் தலைமை ஆசிரியர் முலம் அனுப்பப்பட்டன . அதைத் தொடர்ந்து இணை இயக்குனர் பொன்குமார் அவர்களிடம் கோரிக்கைகளை தெரிவித்தோம் . அவர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் புறக்கணிப்பு நடந்ததை தேர்வுத்துறை இயக்குனரிடம் தெரிவித்துவிட்டதாகவும் உங்கள் கோரிக்கையும் தெரிவிப்பதாகவும் கூறினார். குலுக்கல் முறையில் அறைக் கண்காணிப்பாளர் தேர்ந்தெடுக்க கூடாது என்றும் 20 கிமீ க்குள் பணிகளை நியமிப்பதாகவும் , தேர்வு திருத்தும் மையங்களில் விருப்பப்பட்ட மையங்களில் திருத்தலாம் என்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னபிறகு துறை அலுவலர் கூட்டம் தொடங்கியது .
மாநிலத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மதுரை மாவட்டம் மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்றது .ஒத்துழைப்பு நல்கிய முதுகலை ஆசிரியர்களுக்கு நமது இயக்க வாழ்த்துக்கள்
மாநிலத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மதுரை மாவட்டம் மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்றது .ஒத்துழைப்பு நல்கிய முதுகலை ஆசிரியர்களுக்கு நமது இயக்க வாழ்த்துக்கள்