news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 21 February 2017

துறை அலுவலர் கூட்டம் புறக்கணிப்பு

இன்று   20. 1. 17 துறை அலுவலர்  தொடர்பான  கூட்டம் மதுரையில் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர்களின் மத்தியில்  நமது  TNHSPGTA அமைப்பின் தேர்வு  உழைப்பூதியம் தொடர்பான  போராட்டங்களை  விளக்கி  கூறி  ஆசிரியர்கள்  கூட்டத்தை  புறக்கணிப்பது  என்றும் முடிவெடுக்கப்பட்டது  அதனால் முதன்மைக்கண்காணிப்பாளர் கூட்டம் மட்டும் நடைபெற்றது. ஆணைகள் தலைமை ஆசிரியர் முலம் அனுப்பப்பட்டன . அதைத் தொடர்ந்து இணை இயக்குனர் பொன்குமார் அவர்களிடம்  கோரிக்கைகளை தெரிவித்தோம் . அவர் ஏற்கனவே திண்டுக்கல்  மாவட்டத்தில்  புறக்கணிப்பு நடந்ததை  தேர்வுத்துறை இயக்குனரிடம் தெரிவித்துவிட்டதாகவும்  உங்கள் கோரிக்கையும் தெரிவிப்பதாகவும் கூறினார். குலுக்கல் முறையில்  அறைக் கண்காணிப்பாளர் தேர்ந்தெடுக்க கூடாது என்றும்  20 கிமீ க்குள்  பணிகளை நியமிப்பதாகவும் , தேர்வு திருத்தும் மையங்களில்   விருப்பப்பட்ட மையங்களில்  திருத்தலாம் என்ற  கோரிக்கைகளை  ஏற்றுக் கொள்வதாகவும்  சொன்னபிறகு  துறை அலுவலர்  கூட்டம் தொடங்கியது .
மாநிலத்தலைவர்  அவர்களின்  வழிகாட்டுதலின் படி மதுரை மாவட்டம்  மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்றது .ஒத்துழைப்பு  நல்கிய முதுகலை ஆசிரியர்களுக்கு நமது இயக்க வாழ்த்துக்கள்