news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 26 February 2017

திருச்சி மாநில செயற்குழு கூட்டம் 26.02.2017

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக இன்று 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் கி. ஆ. பெ. விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் முனைவர் திரு. வே. மணிவாசகன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இரா. பிரபாகரன், மாநிலப் பொருளாளர் திரு. அ.கிருஷ்ணன், மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செயற்குழுவில் பொதுத் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான உழைப்பூதியங்களை உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றி மாவட்ட வாரியாக விவாதிக்கப்பட்டது. மேற்கொண்டு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. செயற்குழுவில் முக்கிய கோரிக்கையாக மேல்நிலைப் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் முகாம் அலுவலராக உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்து பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலராக உள்ளவர்கள் பணியமர்த்தக் கூடாது எனவும் அப்படி மீறி பணியமர்த்தப்பட்டால் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை புறக்கணிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் செயற்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.