news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 20 January 2017

19.1.17 அன்று நடைபெற்ற மதுரை மாவட்ட பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

மதுரை  மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நேற்று மாநிலப்பொதுச் செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது . மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமை தாங்கினார்
ஜாக்டோ  மற்றும்  மாவட்ட  பிரச்சனைகள் ,வழக்குநிதி ,ஜல்லிக்கட்டு  ஆகிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.தமிழர் உணர்வை மதித்து  மத்திய ,மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறது .
2. மாநிலத்தலைவர்  மற்றும்  ஜாக்டோ  அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு  தொடர்பான  போராட்டங்களில்  களம் அமைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
3.நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் தொடரில்  ஊதிய குழு அமைக்கவேண்டும் , CPS தொடர்பான அறிக்கையினை  வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது .
4.செய்முறைத் தேர்வு, பொதுத்தேர்வு  ஆகியவற்றில்  பணிமூப்பு அடிப்படையிலும், 15கி.மி   உள்ளும்  ஆசிரியர்களை நியமிக்க  முதன்மைக்கல்வி அலுவலரை கேட்டுக் கொள்கிறது .
5.மாவட்டத் தலைவராக  நவநீதகிருஷ்ணன் (அய்யங்கோட்டை ), மாவட்டச் செயலாளராக  பிரபு (செக்கானூரணி ), மாவட்டப்  பொருளாளராக  வினோத்(வல்லாளபட்டி ) , அமைப்புச் செயலாளராக முரளி (பாரதிதாசன் மாநகராட்சி), செய்தித் தொடர்பாளராக சம்பத் (வெள்ளையம்பட்டி), மாவட்ட தணிக்கையாளராக சுதாகர்  (நாட்டாமங்கலம்),  மாவட்டத் துணை தலைவராக  ரவிச்சந்திரன் ,பாண்டியன்,   மதுரை கல்வி மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் (அய்யங்கோட்டை), உசிலை கல்வி மாவட்டத் தலைவராக பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


பொதுக்குழுவில் மூத்தோர் அணி மாநில பொறுப்பாளர் பார்த்திபன் ,மாநில துணைத்தலைவர் சிவ ராஜேந்திரன் ,வினோத் ,துரைராஜ்,ஆனந்த சகாயநாதன் ,சோலைராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்