news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 17 December 2016

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2-ல் தொடக்கம்

தமிழகத்தில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதியும் தொடங்குகின்றன. இதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2 தொடங்கி மார்ச் 31 வரை காலை 10 முதல் பகல் 1.15 மணி வரையும், .  வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படுகின்றன. கற்றல் குறைபாடு உடையவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது.