news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 19 August 2017

22. 8 .17 அன்று ஜேக்டோ-ஜியோ சார்பாக திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் .

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம் 

22. 8 .17 அன்று ஜேக்டோ-ஜியோ சார்பாக திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் .
நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் .
போராட்ட களப்பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது என்பதனை பறைசாற்றும் விதமாகவே மதிப்புமிகு தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் ஆணை (No work - No pay ) இருக்கின்றது , அதாவது போராட்ட களத்தை பிசுபிசுக்க இது போன்ற அறிக்கைகளை ஒரு நாள் முன்னதாக வெளியிடும் அரசு இப்போது 5 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடுகிறது என்றால் களப்பணியில் நமது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆற்றி வருகின்ற பணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருத வேண்டும் .
போராட்ட களம் இது போன்ற அறிவிப்புகளை கண்டு தொய்வடையாது , களப்பணிகளை மேலும் தீவிர படுத்திட வேண்டுகிறோம்.
சிந்திப்பீர் !! ஒரு நாள் ஊதியமா , தன்மானத்தோடு வாழ்ந்திட ஓய்வூதியமா !!!
நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
நமது உரிமைகளை மீட்போம் .


இவன்
பெ.இளங்கோவன் & ஜெ.கணேசன்
தொடர்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO ).