news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 4 September 2016

மதுரை மாவட்டத்தில் 17 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் நல்லாசிரியர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் விருது பெற்றவர்கள் விவரம்: மதுரை கல்வி மாவட்டத்தில் தா.வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பி.சங்கரலிங்கம், தலைமை ஆசிரியர்கள் கி.நாகசுப்பிரமணியன் (மதுரை எம்.எல்.டபிள்யு.ஏ.மேல்நிலைப் பள்ளி).
மேலூர் கல்வி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் க.கல்யாணி (மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ச.செல்வராஜ் (திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளி).
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் ச.இளமாறன் (பாப்புநாயக்கன்பட்டி எஸ்.கே.வி.மேல்நிலைப் பள்ளி), க.தர்மர் (வீரப்பெருமாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி).
மதுரை டி.வி.எஸ்.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கே.என்.மோகனன்நம்பூதிரி, தே.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் ரா.ராஜசேகர்.
தொடக்க கல்வி: மதுரைக் கல்வி மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெ.ஜெயந்தி (தா.வாடிப்பட்டி சி.புதூர் நடுநிலைப்பள்ளி), ஓ.எம்.ஆர்.தனேஷ்வரி (மதுரை தெற்குவெளிவீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி), இ.பாத்திமா ஜெயராணி (கண்மாய்க்கரை பாத்திமா நடுநிலைப் பள்ளி).
மேலூர் கல்வி மாவட்டம்: ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறிச்சிபட்டி கோ.ஜெயலதா (குறிச்சிபட்டி நடுநிலைப் பள்ளி), ந.லதா (அ.புதூர் தொடக்கப்பள்ளி), ஜெ.கலைச்செல்வி (திருமோகூர் நடுநிலைப் பள்ளி).
உசிலம்பட்டி கல்வி மாவட்டம்: ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரா.ஆண்டாள் (சந்தையூர் நடுநிலைப் பள்ளி), ரா.கோபாலகிருஷ்ணன் (பேரையூர் தொடக்கப்பள்ளி), இடைநிலை ஆசிரியர் சு.ஷீலா (உசிலம்பட்டி தொடக்கப்பள்ளி).