8.7.15 அன்று மாநிலத்தலைவர் , மாநிலப் பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரை டிபிஐ வளாகத்தில் சந்தித்தனர்.கடந்த 2010 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு முறையான பணிவரன் முறை ஆணை வழங்க வேண்டும் என
பள்ளிக் கல்வித் துறைக்கு பலமுறை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பணிவரன் முறை ஆணை பற்றி கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதால் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநரைக் கண்டித்து, ஜூலை 17-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது பற்றி தெரிவித்தனர் .இணை இயக்குனர் 2010-11க்கான பணிவரன் முறை பற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இது நமது அமைப்பின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என மாநிலத்தலைவர் தெரிவித்தார்