தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்கள்:
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்கள்:
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.