மத்திய அரசின்
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும், புதிய
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த
வேண்டும், மாணவர்களுக்கான நலத் திட்டங்களைச்
செயல்படுத்த தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில்
இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் இந்த உண்ணா விரதம் நேற்று காலை தொடங்கியது. 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த
தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்கினர்.
. மாநில அரசு
சார்பில் ஜேக்டோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இல்லையெனில், அடுத்தகட்டமாக போராட்டத்தைத்
தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று ஜேக்டோ உயர்நிலைக் குழு
உறுப்பினர்கள் தெரிவித்தனர்.