தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில்முதுகலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஏப்.1-பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது பணியாற்றிய ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், தேர்வுப்பணிக்கான உழைப்பூதியத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் விமலா, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் வினோத் உள்பட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலூர் கல்வி மாவட்ட தலைவர் துரைராஜா நன்றி கூறினார்.