news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 2 April 2015

மதுரை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்








மதுரை, ஏப்.1-
பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது பணியாற்றிய ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், தேர்வுப்பணிக்கான உழைப்பூதியத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்டத்  தலைவர் சரவணமுருகன்  தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் விமலா, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் வினோத் உள்பட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலூர் கல்வி மாவட்ட தலைவர் துரைராஜா நன்றி கூறினார்.