news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 24 February 2015

விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை


     பொதுத்தேர்வின்போது அறை கண்காணிப்பாளர்கள்   தேர்வர்களுக்கு முக்கிய  அறிவிப்புகளை     தெரிவிக்க  வேண்டும் என  தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:
* தேர்வு துவங்குவதற்கு முன் அன்றைய தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை அறிவித்து, மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்றுமொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* எஸ்எஸ்எல்சி மொழி பாட தேர்வர்களுக்கு வழங்கப்படும் 22 பக்கங்கள் கொண்ட விடைத்தாளிலுள்ள முதல் 2 பக்கங்கள் ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். எனவே, தமிழ் முதல் தாள் மற்றும் ஆங்கிலம் முதல்தாள் ஆகிய தேர்வுகளின்போது அவ்விரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் .
* எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2வது தாள் தேர்வுக்கு வழங்கப்படும் எஸ்எஸ்எல்சி மொழி பாட முதன்மை தாளிலுள்ள கோடிடப்படாத முதல் 2 பக்கங்களை விளம்பரம் தொடர்பான வினாவிற்கு விடையளிக்க பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது.
* தேர்வு எழுதும்போது ரப் வொர்க் செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும், விடைத்தாளின் வலது பக்க ஓரப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது பக்க ஓரப்பகுதி மதிப்பெண்களை குறிப்படுவதற்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது.
* விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவால் எழுதவேண்டும். மேலும் பயன்படுத்தாத பக்கங்கள் தேர்வரே தமது கைப்பட பேனாவால் கோடிட்டு அடித்து, “பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கபட்டது’ என எழுதவேண்டும். ஆனால், தேர்வரது/ அறைக்கண்காணிப்பாளராவது கையொப்பம் இடக்கூடாது. மேலும் தேர்வரது பதிவெண்ணோ, பெயரோ எழுதக்கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும்.
* கூடுதல் விடைத்தாள்கள் வேண்டுமென்றால், கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே கூடுதல் விடைத்தாளின் தேவையை அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது