news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 4 November 2017

 இன்று மதுரை மாவட்ட TNHSPGTA சார்பில் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து மாவட்ட உள்ள பிரச்சினைகள் பற்றி 35 நிமிடம் பேசினோம்
1.தனியார்பள்ளிகளில் மாதம் முதல் தேதியில் சம்பளம் கிடைப்பதில்லை.பள்ளிகளில் சம்பள பில் தாமதமாக மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கப்படுவதும், சரியான நேரத்தில் சமர்பிக்கப்பட்டும் அலுவலகத்தில் தாமதப்படுவதும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.  இனி பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் 20 தேதிக்குள் பில் அனுப்பப்பட்டால் மாதம் முதல்தேதியில் சம்பளம் கிடைக்க உறுதி அளித்தார். இதில் ஏதேனும் குறைபாடுகள் வந்தால் எமது அமைப்பு கவனத்திற்கு கொண்டுவரவும்.
2. பதினொன்றாம் வகுப்புக்கு syllabus வருமுன் II இடைத்தேர்வு வினாத்தாள்  தயாரிக்கப்பட்டுவிட்டதால் syllabus ல் மாற்றம் உள்ளது.syllabus பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திங்கள்கிழமைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என உறுதி அளித்தார்.
3.பதினொன்றாம் வகுப்பு செய்முறைத்தேர்வுப் பற்றி விளக்கம் கேட்டபோது இணை இயக்குனர் தெரிவித்துள்ளபடி அடுத்தாண்டு 12வகுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
4. பணிவரன்முறை ஆணை கிடைக்காமல் தகுதிகாண் பருவம் முடிக்க முடியாதவர்கள் ஆணைகளை CEO அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். இது சம்மந்தமாக பாதிப்பு இருந்தால்  எமது அமைப்பிடம் தெரிவிக்கவும்.
5. போட்டித்  தேர்வு சம்மந்தமாக பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் துவங்க உள்ளது. நமது அமைப்பு மாணவர்களுக்கு  சிறப்பாக கொண்டுசெல்ல உதவி செய்யும் என உறுதி அளிக்கப்பட்டது.