news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 26 April 2017

மாநிலத் தலைவர் செய்தி

தோழர்களே தோழிகளே இன்று நமது பள்ளிக் கல்வித் துறை செயலர் மாண்பமை உதயசந்திரன் அவர்களை சந்தித்தோம்... மேனிலைக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல்வேறு காரணிகளைப் பற்றி பேசினோம்... மேனிலைக் கல்வி மேம்பட 200 % எமது அமைப்பு தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தேன்.... இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற அனைத்து வகையிலும் எமது முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு உறுதுணையாக இருப்பார்கள் என உறுதி கூறினேன்... நமது செயலர் அவர்களும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.... விடைத்தாள் உழைப்பூதிய அரசாணை வெளியிடப்பட இருப்பதை தெரிவித்தார்... விடைத்தாட்களுக்கு நிலுவைத் தொகையோடு வழங்க அரசாணை 270 வெளியிடப்பட உள்ளதை எடுத்துக் கூறினார்.... அரசாணை 270 அய் பார்க்கும் போது கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்புதிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு செயலரிடம் தெரிவிக்கப்பட்டது.... அவர்களும் சரிசெய்து தருவதாக உறுதி அளித்தார்.... நான் மாநிலத் தலைவராக பொறுபேற்ற 2006-ல் நிலுவைத் தொகை பெற்றுத் தந்தேன். இன்றும் நிலுவைத் தொகை பெற உள்ளோம்... இது எவராலும் நிகழ்ந்தது அல்ல.... நமது உண்மையான போராட்டங்களினால் உழைப்பினால் பெற்றது.... இதனை மற்றவர்களோடு பகிரவும்.. மணிவாசகன்..
மேலும் மே 19-க்கு முன்பே தரம் உயர்த்தப்பட இருக்கும் 100 மேனிலைப் பள்ளிகளை அறிவிக்க முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டேன்.... மாண்பமை செயலர் அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.... அவ்வாறு இக் கோரிக்கை நிறைவேறினால் இதுவும் ஒரு வாலாற்று நிகழ்வாக அமைந்து விடும்.... சுமார் 500 மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் தற்போது காவியாக உள்ளன. 100 பணியிடங்iகளைச் சேர்த்தால் 600 ஆக அமையும்... 900 முதுகலை ஆசிரியப் பணியிடங்களும் கூடுதலாக கிடைக்கும்.