news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 18 June 2016

பிளஸ்-2 தேர்வு ...2,278 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு

கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். 
_அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர். 
_ஆசிரியர்களின் குளறுபடி
_மறுமதிப்பீட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. 
_சில பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. 
_குறிப்பாக ஒரு மாணவருக்கு 186 மதிப்பெண்ணுக்கு பதிலாக 86 மதிப்பெண் என்று போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2 ஆயிரத்து 278 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது.