தீபவளி நன்னாளில் சிறியவர்களும், பெரியவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ளும் வேளையில் முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தவறுதல் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட ஏதுவாக உள்ளது. எனவே, விபத்துக்கள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
(1) பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை
தவிருங்கள். டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய
ஆடைகளை அணியக்கூடாது.
(2) பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.
(3) பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.
(4) மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்க செய்யாதீர்கள்.
(5) ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில்
மட்டுமே செலுத்துங்கள்.
(6) பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றுட்ம
சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.
(7) பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ
வெடிக்காதீர்கள்.
(8) குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
(9) நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
(10) விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
(11) பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ செய்யாதீர்கள்.
(12) இரவு 10.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை பட்டாசுகளை
வெடிக்காதீர்கள்.
(13) அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாக் கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
(1) பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை
தவிருங்கள். டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய
ஆடைகளை அணியக்கூடாது.
(2) பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.
(3) பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள்.
(4) மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்க செய்யாதீர்கள்.
(5) ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில்
மட்டுமே செலுத்துங்கள்.
(6) பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றுட்ம
சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.
(7) பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ
வெடிக்காதீர்கள்.
(8) குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
(9) நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
(10) விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
(11) பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ செய்யாதீர்கள்.
(12) இரவு 10.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை பட்டாசுகளை
வெடிக்காதீர்கள்.
(13) அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாக் கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.