தமிழகத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்கள், உயர்கல்வியை நேரடியாக தொடர, அரசு தடை உள்ளது. பகுதி
நேரமாக, அல்லது தொலைதூர கல்வி மையங்கள் வாயிலாக உயர்கல்வியை தொடர
அனுமதிக்கப்படுகின்றனர்.
பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்றவற்றுக்கு கல்வி
தகுதியை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்வதால், பணியில் இருந்துகொண்டே
பலரும், உயர்கல்விக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
எம்.பில்., - பி.எச்.டி., போன்ற ஆராய்ச்சி
படிப்புகளில் சேருவோர், துறை தலைவரான, பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் முன்
அனுமதி பெற வேண்டும். பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, பள்ளி தலைமை
ஆசிரியரின் முன்அனுமதி பெற்றால் போதுமானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.