news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 24 September 2015

அக்.,8ல் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க, முதல் நாளே அனைத்து பள்ளிகளை பூட்டி விட்டு, சாவிகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த 'ஜாக்டோ' வேலைநிறுத்த ஆயத்த கூட்டத்தில் முடிவு

மதுரை மாவட்டத்தில், அக்.,8ல் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க, முதல் நாளே அனைத்து பள்ளிகளை பூட்டி விட்டு, சாவிகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,' என, மதுரையில் நேற்று நடந்த 'ஜாக்டோ' வேலைநிறுத்த ஆயத்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  கூட்டத்தில், 'மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடக்கும் வேலைநிறுத்தத்தில், தொடக்க முதல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வரை அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அக்.,7 மாலையே பள்ளிகளை பூட்டி சாவிகளை, முதன்மை கல்வி அலுவலகத்தில், தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஜாக்டோவின் 17 ஆசிரியர் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.