மதுரை மாவட்டத்தில் முதுகலைஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஒய்வு மற்றும் பதவி உயர்வு காரணமாக 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தன. 188 பேர் விண்ணப்பித்தனர் கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களும் காண்பிக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதுகலை ஆசிரியர்கள் 31 பேருக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது . இந்தாண்டு கலந்தாய்வு சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களுக்கும் முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.