news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 17 December 2017






பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட் டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருளி ராஜ் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் சரவணமுருகன், செல்லப்பாண்டியன் , முருகன் முன்னிலை வகித்தனர்.
தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில முன்னாள் பொது செயலாளர் தேவேந்திரன்,மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்  பேசினர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.