news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 14 March 2017

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி,குடிநீர் ,கழிப்பறை, காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இப்போதே மின்வெட்டு ஆரம்பித்துவிட்டது .விடைத்தாள் திருத்தும் போது  அதிகமாக இருக்கும்  கடந்த ஆண்டுகளில்   நமது அமைப்பின்  போராட்டத்தால் விடைத்தாள் மையங்களில்  ஜெனரேட்டர்கள்கள்  அமைக்கப்பட்டு  விடைத்தாள்  திருத்தும் பணி  நடைபெற்றது . ஆனால்  கடந்த இரண்டு ஆண்டுகள்  மின்வெட்டு குறைவாக இருந்ததால்  அமைக்கப்படவில்லை  இந்த ஆண்டு அமைக்கப்படவேண்டும்

ஜெனரேட்டர் வசதி விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் செய்ய வேண்டும். குடிநீர் ,கழிப்பறை, காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
தேர்வுப் பணி, பறக்கும் படையில் பணிபுரிவோருக்கு தேர்வு முடிந்த நாளில், உழைப்பூதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும்  போன்ற  கோரிக்கைகளை  நாம் ஒவ்வொரு ஆண்டும்  வலியுறுத்தி வருகிறோம் .
இந்தாண்டு  அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும்  மையத்தில்  உரிய ஏற்பாடுகள்  செய்யாத பட்சத்திலும் தேர்வு மற்றும் விடைத்தாள் உழைப்புதியம்  உயர்த்துவதற்கான அரசாணை உடனே வெளியிடப்படவேண்டும்  என்று தலைவர் தேர்வுத்துறை இயக்குனரோடு நடத்திய  பேச்சுவார்த்தை அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்   +2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு  செய்யப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் .