பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Monday, 3 April 2017

02.04.2017 அன்று திருச்சியில் அவசர மாநில செயற்குழு கூட்டம்




02.04.2017  அன்று திருச்சியில் அவசர மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது... அதில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 (1). விடைத்தாட்கள் எண்ணிக்கையை 10 + 10 எனவும் மொழிப் பாடங்களுக்கு 13+13 எனவும் குறைக்க 20.02.17 அன்று தேர்வுகள் துறை இயக்குனரோடு நடந்த பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொள்ளப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியும்
 ( 2 ) . ஏற்றுக் கொள்ளப்பட்ட தேர்வுகள் உழைப்பூதியம் மற்றும்  விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.15/-  ஆகிய கோரிக்கைகள் சார்ந்த அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும்
 ( 3 ) . முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றாமல் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றுபவர்கள் +2 விடைத்தாள் நடுவத்திற்கு முகாம் அலுவலராக  பணியாற்றக் கூடாது எனவும் அதற்கு பதிலாக மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை முகாம் அலுவலராக நியமிக்க வேண்டும் எனவும் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியதோடு அவைகள் சார்ந்து தேர்வுகள் துறை உடனடியாக முகாம் அலுவலர்களுக்கு தெளிவுரை வழங்க வேண்டும் எனவும் உழைப்பூதியத்திற்கான அரசாணையை உடனே பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற 05.04.17 அன்று தொடங்க உள்ள விடைத்தாட்கள் திருத்தும் பணியை முதன்மைத் தேர்வாளர்களும் கூர்ந்தாய்வு அலுவலர்களும் விடைத்தாட்களை பெற்றுக் கொண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது